on stage

சென்னை பெரியார் திடலில் கடந்த 48 ஆண்டுகளாக பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இதில் புதுத் திருப்பம் தந்தார். அதுதான் மக்களைத் தேடிச் செல்லும் மன்றல் நிகழ்ச்சி! மன்றல் நிகழ்ச்சிகள் சென்னையில் தொடங்கி, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மய்யங்களில் நடைபெற்றுள்ளன. அடுத்து பல முக்கிய மய்யங்களில் நடத்திடத் திட்டம் கைவசம் உள்ளது.

ஜாதி மறுப்பு, மத மறுப்பு, துணைவரை இழந்தவர்கள், மணவிலக்குப் பெற்றோர், மாற்றுத் திறனாளிகள் இவர்களிடையே இணை தேடும் சிறப்பு நிகழ்ச்சி இது!

ஆயிரக்கணக்கில் மணமக்களும், பெற்றோர்களும், உற்றார் உறவினர்களும், இவற்றில் ஆர்வமுடைய இலட்சியவாதிகளும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.

வாழ்க்கை இணை நலத்துக்குரிய ஆண்கள், பெண்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள். அவர்களைப் பற்றிய தகவல்கள் அறிவிக்கப்படும். அறிமுகத்துக்குப் பிறகு கலந்துகொண்டவர்களுக்கிடையே கலந்துரையாடும் வாய்ப்பு ஏற்படும்.

முன்பே முடிவு செய்யப்பட்ட சில சுயமரியாதைத் திருமணங்கள் மாலை நிறைவு விழாவில் நடைபெறும்.

தத்தம் ஊர்களுக்குச் சென்ற பிறகு தொலைப்பேசி மூலம் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது மன்றல் நிகழ்ச்சி சாதனைத் தோட்டத்தில் பூக்கும் புதுமலராகும்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது - முன்னமே விதிப்பலனால், பிராப்தப்படி ஜாதகப் பொருத்தத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்ற மூடக் கருத்தின் முதுகைப் பிளக்க வைக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குக் காரணகர்த்தா என்ற முறையில் தந்தை பெரியார்- கொள்கைகளை செயல்படுத்தி வருவதில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் - இவற்றிற்கு இணையாகப் புரட்சி பற்றி வாய் திறக்க, மார்பு தட்ட வேறு யாரால், எந்த அமைப்பால் முடியும்?

...
மன்றல்

ஜாதி மறுப்புத் இணை தேடல் பெருவிழா உங்களுக்கு பொருத்தமான இணையரைத் தேட ஓர் அரிய வாய்ப்பு

...
மன்றல்

ஜாதி மறுப்புத் இணை தேடல் பெருவிழா உங்களுக்கு பொருத்தமான இணையரைத் தேட ஓர் அரிய வாய்ப்பு

...
மன்றல்

ஜாதி மறுப்புத் இணை தேடல் பெருவிழா உங்களுக்கு பொருத்தமான இணையரைத் தேட ஓர் அரிய வாய்ப்பு

...
மன்றல்

ஜாதி மறுப்புத் இணை தேடல் பெருவிழா உங்களுக்கு பொருத்தமான இணையரைத் தேட ஓர் அரிய வாய்ப்பு

தொடர்புக்கு